யேசு அழைக்கிறார் !!தொலைப்பேசியை எடுத்தவுடன் தெரிந்துவிட்டது. மீண்டும் யேசு அழைத்துவிட்டார் ! அதே குரல்,எனக்கு இந்த முறையும் பதற்றம் குறையவில்லை. ஐயா வணக்கம் என்றேன், பின்னர் நமஸ்தே, நமஸ்காரம் என்றெல்லாம் இடைவெளி இல்லாமல் சொல்லிவிட்டேன். யேசு மௌனமாக இருந்தார். நான் சுதாரித்துக் கொண்டு “அல்லேலோயா” என்றேன். யேசு பெரிதாக சிரித்தார். “வணக்கம் என்று சொல்லுங்கள் அதுவே